🌏🌍சூரிய வழிபாடு - ஒரு ஆழமான அலசல்🌎🌏🌍

🌎🌏🌍சூரிய வழிபாடு - ஒரு ஆழமான அலசல்🌎🌏🌍





பூவுலகத்தில் சூரிய வழிபாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது. அசையும் பொருள்கள் அனைத்திற்கும் சூரியனே உயிர் தருகிறான் என்கின்றன, வேதங்கள்! சூரிய வழிபாடுபற்றியும் சூரிய வழிபாட்டினால் ஏற்படும் பலாபலன்கள் பற்றியும் விரிவாக அலசுவதே சித்தர்களின் குரலில் இந்தப்பதிவு.


இந்த வழிபாடு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி நிச்சயமாக ஒன்றும் கூறமுடியவில்லை. கி.மு.2000-க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை உலகத்தினர் வழிபட்டு வந்துள்ளனர்.


நம்நாடு சூரிய வெப்பம் மிகுந்த நாடு. ஆகவே, அவன் அருளைப் பெற அவனை மக்கள் வழிபட முற்பட்டதில் வியப்பில்லை. பல நோய்களை சூரிய கிரணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான். 


சூரியன் ஒரு கோள்! கிரகம்! அதைக் கடவுளாக வழிபடலாமா என்ற சந்தேகம் எழலாம். வேதம் ஒன்றுதான் இந்த சந்தேகத்தைப் போக்குகிறது. வேதமே, சூரியன் கோள மயமானதுதான் என்கிறது. வேதகால ரிஷிகள், “சூரியனே தண்ணீருக்கெல்லாம் ஆத்மா” என்று குறிப்பிடுகிறார்கள். சூரியனால் உலகத்துக்கு ஏற்படும் நன்மைகளையும் வேதம் வரிசைப்படுத்திக் கூறுகிறது. 


வேதத்தில் காணும் உண்மைகள், நவீன விஞ்ஞான உண்மைகளுக்கு முரணாக இல்லை. சூரிய ஒளியில் நிறப்பிரிகை ஏற்பட்டால் ஏழு வண்ணமாகப் பிரிகிறது. ஏழு வண்ண ஒளியின் சேர்க்கையே சூரிய ஒளி. சூரியனுக்கு ஏழு குதிரைகள் என்று வேதம் வர்ணிப்பதன் சூட்சுமம் இதுவே. குதிரையை அசுவம் என்பர். அசுவம் என்ற சொல்லுக்கு வர்ணம் என்றும் பொருளுண்டு. 


பாரசீகத்தில் தங்கிவிட்ட ஆரிய குலத்தினர் சூரியனை வழிபட்டார்கள் என்றாலும், அக்னிக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் திராவிடர்களுடன் கலந்து விக்ரக ஆராதனையை மேற்கொண்டார்கள். சூரியனை விஷ்ணுவின் அவதாரமாக இவர்கள் கொண்டார்கள். 


சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று பாரசீகர்கள் நம்பினார்கள். பாரசீக மத குருக்களான மாகாஸ்கள், சூரிய வழிபாட்டின் மூலம் சிகிச்சை செய்யும் மருத்துவர்களாக விளங்கினர்.


பஞ்சாபை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தோல் நோய் ஏற்பட்டது. அவன் மாகாஸ்களை வரவழைத்தான். நோய் குணமாகவே, இப்போது பாகிஸ்தானில் உள்ள “மூல்தான்” நகரில் அவன் சூரியனுக்காகவே ஒரு கோவில் கட்டுவித்தான். 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய இந்த ஆலயம்தான் பண்டைய இந்தியாவில் சூரியனுக்காக ஏற்பட்ட முதல் கோயில்.


இந்த ஆலயம் அவுரங்கசீப் காலத்தில் அழிவுற்றது. மூல்தானிலிருந்து சூரியவழிபாடு காஷ்மீருக்குப் பரவியது. பிரபல மன்னனான லலிதாதித்ய முக்தா பீடன் என்பவன் இங்கே சூரியனுக்கு ஒரு கோயில் கட்டினான். இந்தக் கோயில், கிரேக்க ஆலய அமைப்பில் கட்டப்பட்டது. பின்னர் வந்த இஸ்லாமிய மன்னன் சிக்கந்தர் பட்டீஸ்கான் (கி.பி.1391 - 1414) இந்தக் கோயிலை இடித்து நாசமாக்கி விட்டான். 


சூரியனுக்காகக் கட்டிய புராதனக் கோயிலில் ஒன்று ஒரிஸ்ஸாவிலுள்ள கொனார்க் கோயில். கலிங்கத்தை ஆண்ட நரசிங்க தேவன் (கி.பி.1238 - 64) இதைக் கட்டினான். இப்போது இந்தக் கோயிலின் ஒரு பகுதி மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை.


தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோயில் என்ற இடத்தில் சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது.


சூரியனைப் பரம்பொருளாக “ஆதித்ய ஹிருதயம்” கூறுகிறது. “மார்க்கண்டேய புராணம்”, “பவிஷ்ய புராணம்” முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் “காயத்ரி” சூரியனுக்கு உகந்த மந்திரம்.


“சூரிய நமஸ்காரம்” என்பது உடற் பயிற்சி, யோகப் பயிற்சியுடன் கூடிய வழிபாடு. இன்று இது மேல்நாட்டிலும் பரவியுள்ளது.


சூரிய வழிபாடு “சௌர மதம்” என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சௌர மதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும் பரவியிருக்கிறது. ரோமில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதத்தையே சௌரம் எதிர்த்து நின்றது. கி.மு.1400-ஆம் ஆண்டு முதலே மத்திய கிழக்கு நாடுகளிலும் அது பரவியிருந்தது. எகிப்தில் சூரியனை “ரே” அல்லது ‘ரா-அதுன் என்று குறிப்பிட்டார்கள். எகிப்திய அரசர்கள் தங்கள் பெயரோடு ‘ரே” என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டார்கள்.


ஆதிகாலத்தில் சௌர மதத்தினர் சூரியனுக்கு ரத்த அர்க்கியம் கொடுத்து வழிபட்டார்கள். ஆதிசங்கரர்தான் இதை மாற்றினார்.


தை மாதம் முதல் நாள் - சூரியன் மகர ராசிக்குள் (உத்தராயணம்) பிரவேசிக்கும் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு சூரிய வழிபாடு நடத்துகிறார்கள். கீதையில் கண்ணபிரான் ‘ஜ்யோதிஷம் ரவிர் சும் சுமான்’ என்று கூறி, ஜ்யோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.


எனினும் சூரியனை சிவசூரியன் எனும் பெயரில் சிவரூபமாகவும் குறிப்பிடுகின்றனர். சிவபெருமானின் அஷ்ட மூர்த்ங்களில் ஞானக்கண் உடைய ஒருவராகவும் சூரியன் கருதப்படுகிறார்.


அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரியனின் கனிந்த ஒளியிலே நாள் தவறாமல் திளைத்து வந்தார்கள். சூரிய கிரணங்களை “ஜீவத்திறல்” என்றும் “ஆயுளை வளர்க்கும் அன்னம்” என்றும் போற்றினார்கள். அவர்கள் உடல், உள்ளம், உயிரில் தேவசக்தியும் தெய்வ ஒளியும் துள்ளின. 


சுற்றும் உலகுக்கே சூத்திரமாக விளங்கும் சூரியனின் பெருமை இன்று சுருங்கிப்போய்விட்டது. என்றாலும், பொங்கல் திருநாளில் மட்டும் ஆதித்தனைப் போற்றும் பழக்கம் இன்றும் தொடர்கிறது...!


வெற்றிகளை குவிக்கும் சூரிய வழிபாடு

-----------------------------------------------------------------------


உத்தராயண புண்ணிய காலத்தின் முதல் மாதம் தை மாதம். சூரியன், சனீஸ்வரரின் வீடான மகர ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் வளர்பிறை ஏழாம் நாள் சூரிய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சப்தமி எனும் ஏழாம் நாளில் வருவதால் ரத சப்தமி என எல்லோராலும் அறியப்படுகிறது. நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன். சகல ஜீவ ராசிகள், பயிர் பச்சைகளை தன் ஒளிக்கதிர்களால் வாழ வைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். ஆட்சி, அதிகாரம், தலைமைப் பதவி, ஆளுமை போன்றவற்றின் கர்த்தா.  


ஜாதக அடிப்படையில் சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள், அதிகார மையங்கள், தலைமை செயலாளர்கள் ஆகியவற்றில் பணிபுரிய சூரியனின் அனுக்கிரகம் அவசியம். அத்தகைய சர்வ ஆதிக்கமும், அதிகாரமும் உடைய சூரிய பகவானுக்கு உகந்த நாள் இந்த ரத சப்தமி. ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து கிழக்கு நோக்கி சூரியனை பார்த்து வணங்கியபின், தாய், தந்தையரை வணங்கி ஆசி பெறுவது இந்துக்களின் முக்கிய வழிமுறையாகும். அன்றைய தினம் குளிப்பதற்கு முன்பு ஏழு எருக்கம் இலைகளை தலை முதல் கை, தோள்பட்டைகள், காதுகள் என வைத்து சூரிய பகவானை பிரார்த்தித்து தலையில் நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். 


எருக்கன் இலை என்பது அருக்கன் இலை என்பதில் இருந்து மருவி வந்துள்ளது. அருக்கன் என்றால் சூரியன். இந்த இலையில் சூரியனின் சாரம் உள்ளது. எனவேதான் ஆண்டுக்கு ஒருமுறை எருக்கன் இலை வைத்து குளிக்கும் வழிபாடு ஏற்பட்டது. சூரியனுக்கு பல்வேறு விதமான பெயர்கள் உண்டு. தினகரன், பாஸ்கரன், அருக்கன், சூரிய நாராயணன் என பல காரணப் பெயர்கள் உண்டு. இதில் சூரிய நாராயணன் என்ற பெயர் விஷ்ணுவை குறிப்பதாகும். இந்த ரத சப்தமி நாளில் எல்லா வைணவ தலங்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், உற்சவங்கள் நடைபெறும். திருப்பதியில் அதிகாலை சூரிய உதயத்தில் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை எந்த நாளும் இல்லாத வகையில் பெருமாள் சப்த வாகனங்களில் அமர்ந்து அருள் பாலிப்பார். 


முதலில் சூரிய பிரபையில் ஆரம்பித்து, சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், கடைசியாக சந்திர பிரபையில் எழுந்தருளி நாள் முழுவதும் சேவை சாதிப்பார். இந்த நாள் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்போல் புண்ணிய பலன்களை தரும் நாளாக புராணங்கள் போற்றுகின்றன. இந்நாளில் துவங்கும் புதிய முயற்சிகள், அரசாங்க விஷயங்கள், முக்கிய சந்திப்புக்கள். தொழில், வியாபாரம் ஆரம்பித்தல் எல்லா சுப விஷயங்களுக்கும் பிள்ளையார் சுழி போடுதல் போன்றவை வெற்றிகரமாக முடியும். தியானம், மந்திரஜெபம், யோகா, கல்வி, கலை, பயிற்சிகள் போன்றவற்றை துவக்குவதற்கு நல்ல நாளாகும். இன்று செய்யப்படும் தானங்கள், தர்மங்கள், உதவிகள் ஒன்றுக்கு பத்தாக புண்ணியத்தை சேர்க்கும்.


வழிபாடு -பரிகாரம்

----------------------------------


தினசரி சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, கோதுமை ரவை போன்றவற்றை இல்லாதோர், நோயாளிகளுக்கு தரலாம். கோதுமை பலகாரத்துடன் பழங்கள், கீரை சேர்த்து பசுவுக்கு கொடுக்கலாம். தினசரி சூரிய காயத்ரி மந்திரம் 108 முறை சொல்லி வரலாம். ஓம் அம் நமசிவாய சூரிய தேவாய நம என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம். சூரிய தலமான ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரியனுக்குரிய பிரார்த்தனை தலமாகும். ரத சப்தமி மற்றும் ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை சப்தமியில் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று பிரார்த்திக்கலாம் - ஜோதிட முரசு மிதுனம் செல்வம்


சூரியனின் அம்சங்கள் (ஆதிக்கம்)

-------------------------------------------------------------


கிழமை : ஞாயிறு

தேதி : 1, 10, 19, 28.

நட்சத்திரம் : கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.

தமிழ் மாதம் : சித்திரை, ஆவணி

ராசி : சிம்மம்

உச்சம் : மேஷம்

நீசம் : துலாம்

நிறம் : சிவப்பு

ரத்தினம் : மாணிக்கம் (சிவப்பு)

தானியம் : கோதுமை

ஆடை : சிவப்பு


சூரிய வழிபாடு பிறந்த கதை

----------------------------------------------------


ஆதி மனிதனின் முதல் வழிபாடு சூரிய வழிபாடாகத் தான் இருக்க முடியும். ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது. இந்த வழிபாடு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி அறியப்படவில்லை. கி.மு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை இந்தியர்கள் வழிபட்டு வந்துள்ளனர். வெப்ப மண்டல பகுதியில் அமைந்தது தான் இந்தியா. அதனால் நம் நாட்டில் சூரிய வழிபாடு ஏற்பட்டதில் ஆச்சரியத்திற்கு இடமில்லை.


பல நோய்களை சூரிய கிரகணங்கள் குணப்படுத்துவதாக இந்தியாவில் தோன்றிய அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும், புராண இதிகாசங்களுக்கும் சூரியனின் புகழைப் பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான். அதனால், அந்த சூரியனை இந்தியர்கள் வழிபட ஆரம்பித்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இன்றைய அறிவியல் ரீதியாக சூரியன் ஒரு கோள். அதை தெய்வமாக வழிபடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று இன்றைய தலைமுறை வாதிடலாம். ஆனால் அதில் தவறில்லை என்கிறது வேதம். இந்திய வேத காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் சூரியனே தண்ணீருக்கெல்லாம் ஆத்மா என்று குறிப்பிடுகிறார்கள். வேதத்தில் காணப்படும் உண்மைகள், நவீன விஞ்ஞான உண்மைகளுக்கு முரணாக இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.


சூரிய ஒளி நிறப்பிரிகையில் 7 வண்ணமாகப் பிரிகிறது. 7 வண்ண ஒளியின் சேர்க்கையே சூரிய ஒளி, சூரியனுக்கு 7 குதிரைகள் என்று வேதம் வர்ணிப்பதன் சூட்சமம் இதுவே! குதிரையை `ëஅசுவம்' என்பார்கள். அசுவம் என்ற சொல்லுக்கு `வண்ணம்' என்றும் பொருள் உண்டு. பாரசீகத்தில் தங்கிவிட்ட ஆரிய குலத்தினர் சூரியனை வழிபட்டார்கள் என்றாலும், அக்னிக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் தந்தார்கள்.


இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் திராவிடர்களுடன் கலந்து விக்ரக ஆராதனையை மேற்கொண்டார்கள். சூரியனை, விஷ்ணுவின் அவதாரமாக ஏற்றுக் கொண்டார்கள். சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் எந்று பராசீகர்கள் நம்பினார்கள். பாரசீக மத குருக்களான மாகாஸ்கள், சூரியவழிபாட்டின் மூலம் சிகிச்சை செய்யும் மருத்துவக்களாக விளங்கினர்.


ஒருமுறை பஞ்சாப்பை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தோல் நோய் ஏற்பட்டது. அவன் மாகாஸ்களை வரவழைத்தான். நோய் குணமாகவே இப்போது பாகிஸ்தானில் உள்ள மூல்தான் நகரில் அவன் சூரியனுக்காகவே ஒரு கோவில் கட்டுவித்தான். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த ஆலயங்கள் பண்டைய இந்தியாவில் சூரியனுக்காக ஏற்பட்ட முதல் கோவில்.


இந்த ஆலயம் அவுரங்கசீப் காலத்தில் அழிவுற்றது. அதன்பின், மூல்தானில் இருந்து காஷ்மீருக்கு சூரிய வழிபாடு பரவியது. சூரியனுக்காக கட்டிய புராதனக் கோவில்களுள் ஒன்று ஒரிசாவில் உள்ள கோனார்க் கோவில். கலிங்கத்தை ஆண்ட நரசிங்க தேவன் (கி.பி.1238-64) இதைக் கட்டினான். இப்போது இந்த கோவிலின் ஒரு பகுதி மட்டுமே மிஞ்சி இருக்கிறது.


இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத வேலைப்பாடுகள் கொண்டவை. தமிழ்நாட்டிலும் சூரிய பகவானுக்கு கோவில் இருக்கிறது. கும்பகோணத்தை அடுத்துள்ள `சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது. சூரியனைப் பரம்பொருளாக ஆதித்ய ஹிருதயம் கூறுகிறது மார்க்கண்டேய புராணம்.


பவிஷ்ய புராணம் ஆகியவையும் சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் காயத்ரி, சூரியனுக்கு உகந்த மந்திரம் தான்! சூரிய நமஸ்காரம் என்பது உடற்பயிற்சி, யோகப் பயிற்சியுடன் கூடிய வழிபாடு.


இன்று இது பிற நாடுகளிலும் பரவியுள்ளது. தை மாதம் முதல் நாளன்று சூரியன் மகர ராசிக்குள் (உத்தராயணம்) பிரவேசிக்கின்றான். அன்றைய தினம் நாம் பொங்கல் பண்டிகை கொண்டாடி சூரியனுக்கு நன்றி செலுத்துகிறோம்.


பொங்கல் அன்று சூரிய வழிபாடு ஏன்?

---------------------------------------------------------------------


"தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருபவன் சூரியன்" என்று நயமாகப் பாடியுள்ளார் கவியரசு கண்ணதாசன். இது மாபெரும் உண்மை. ஆதவனின் சாரமாகிய வெப்பம் மற்றும் வெளிச்சத்தின் சக்தியைக் கொண்டுதான், இப்புவியில் மரம், செடி, கொடி, புல் பூண்டு மற்றும் மிருகம், பறவை இன்னும் புழு- பூச்சி இனங்கள்... ஏன் மனித குலம் வரை அனைத்துமே தோன்றி வளர்ந்து, இப்புவியைத் தழைக்கச் செய்கின்றன.


மேலும், சூரியனின் பேருதவியின்றி எந்த ஓர் உயிரினமும் தனது உணவைப் பெற்றுவிட முடியாது. அதுமட்டும் அன்று! புவியின் அனைத்து உயிரினங்களின் வாழ்வுக்கும் ஒவ்வாதவற்றை அழித்து, அவற்றின் சுகாதாரமான நலவாழ்வை உறுதி செய்வதும் சூரியனே! இயற்கைப் படைப்புகளின் அழகின் வெளிப்பாடு, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கும் மூலாதாரக் காவலனாக விளங்குவதும் சூரியன்தான். உலகின் தொன்மைப் படைப்பான வேதங்களில், "சூரியனின் பெருமைகள்' கூறப்பட்டுள்ளன.


பாரதத்தில் சூரிய வழிபாடு, மார்கழி முடிந்து தை பிறக்கின்ற நன்னாளில், "மகர சங்ராந்தி'யாக அனுசரிக்கப்படுகிறது. இதுவே "பொங்கல் திருநாள்' ஆகும். இந்தக் காலகட்டத்தில் சூரியன், தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குவதால், அந்தத் தினம் மிகவும் புனிதமானதாகும். சூரியனின் அந்தப் பயணம்தான் பூமத்திய ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ள நமது பாரதத்துக்கான கோடையின் தொடக்கமாகும். கோடைக்காலம் தரும் சூரியனின் வட திசைப் பயணம், அதாவது உத்தராயணம், தேவர்களின் பகல் பொழுது. அதன் தொடக்கம், இந்த "மகர சங்கரமணம்' என்பதால், புலரும் சூரியனை அன்று வணங்குவது மிகவும் பொருத்தமானது; புண்ணியம் தரக் கூடியது.


தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, மிகவும் பிரபலமானது. பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது. அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நாம் வழிபடுகிறோம். இதனால்தான் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக "உழவர் திருநாள்' கொண்டாடப்படுகிறது.


பொங்கல் திருநாளன்று பசும்பாலில் உலை வைத்து, அதில் புத்தரிசியும் புதுவெல்லமும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறோம். அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள், புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம். வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் ஆதவனுக்கு நிவேதனம் செய்து, அகம் மகிழ்கின்றோம்.


பொங்கல் தினத்துக்கு முன் தினம், பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகையும், மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் கொண்டாடப்படுகின்றன.


நம் பாரதத்தில் மட்டுமல்லாது, உலகின் பல பகுதிகளிலுமே சூரிய வழிபாடு ஏதாவது ஒரு வகையில் இருந்து வருகிறது.


கிரேக்க நாட்டினர் சூரியனை, "இவ்வுலகைப் படைத்தவர்' எனக்கருதி வழிபடுகின்றனர். மெக்சிகோவாசிகளும் அப்படியே! அவர்களின் திருமணச் சடங்குகளில் சூரிய ஆராதனை, முக்கிய இடம் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல... கிரேக்கர்கள் நம் பாரத தேசத்தவர் போலவே ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிளம்பி வந்து, இரவில் திரும்பிச் செல்பவர் சூரியன் என்று கூறி, அவரை ஆராதிக்கின்றனர்.


வேறு சில வெளி நாட்டினர், சூரியனுக்குத் தேக ஆரோக்கியத்துடன் நெருக்கமான தொடர்பு இருப்பதை உணர்ந்து, "சூரிய உபாசனை செய்தால் கொடிய நோய்கள் தீரும்' என்ற நம்பிக்கையோடு வழிபடுகின்றனர். அரசனை சூரியனின் வம்சத்தில் உதித்ததாகக் கருதி, ஜப்பானியர்கள் சூரியனை வழிபடுகின்றனர்.


பண்டைய எகிப்தியர்கள் உதய ரவியை "ஹோரஸ்' என்றும், நண்பகல் சூரியனை "ஆமென்ரர்' என்றும், மாலைச் சூரியனை "ஓசிரில்' என்றும் அழைத்தனர். "டைஃபோ' என்ற இருளரக்கன், முதலை உருவத்தில் வந்து, மாலையில் "ஓசிரிலை' விழுங்கிவிடுவதாகவும், மறுநாள் காலையில் "ஹோரஸ்' அவனை வென்றுவிடுவதாகவும் நம்பினர். பண்டைய எகிப்தில் பல சூரியக் கோயில்கள் இருந்துள்ளன. சூரிய வழிபாடு மட்டுமல்லாமல், அங்கு நட்சத்திர ஆய்வுகளும் நடத்தப்பட்டன.


இங்கிலாந்தின் பூர்வ குடிகள், திறந்த வெளியில் சூரிய பூஜையை நடத்தினர். வேறு சில நாடுகளில் சூரியச் சிலைகள் அரசனின் உருவத்தில் அமைக்கப்பட்டன. அவற்றுக்குத் தலைக் கவசம், உடற் கவசம் மற்றும் காலணிகள் இருந்தன. நேபாளத்தில் இன்றும் சூரியக் கோயில்கள் உள்ளன. அங்கு முறைப்படி சூரிய வழிபாடு நடைபெறுகிறது.


இவ்விதம், பண்டைக்காலம் தொட்டே உலகின் பல்வேறு நாடுகளில், சூரிய வழிபாடு செய்யப்பட்டு வருகிறது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மையாகும்.


சர்வம் சிவார்ப்பணம்..


ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘