இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🌏🌍🌎கெட்டவர்கள்தவறு செய்யலாம்...🌏🌍🌎

படம்
  🌏🌍🌎கெட்டவர்கள்தவறு செய்யலாம்...🌏🌍🌎   தேவதத்தன் என்ற பக்தன் தீவிரமாக நாராயண பூஜை செய்பவன். அவனிடம் பக்தி என்ற செல்வம் அளவுகடந்து இருந்தாலும் வாழ்வதற்குக் தேவையான செல்வம் இருக்கவில்லை. அதனால் அவனுடைய குடும்பம் வறுமையால் வாடிக்கொண்டிருந்தது தினந்தோறும் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை அவன் செய்வது வழக்கம். அவள் மனைவிக்கு அவன் மீது ரொம்ப கோபம். அதனால், அவளும் தினமும் அவனிடம் தம் குறைகளை முறையிட்டு ஒரு சகஸ்ரநாம அர்ச்சனை செய்வது வழக்கம். தினமும் இதைக் கேட்டுவிட்டுக் கங்கை நதியில் நீராடப் போவான் தேவதத்தன். அங்கே நதியில் நீராடிய பிறகு விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லுவான். விஷ்ணுவின் பிம்பம் செய்து, வீட்டிலிருந்து கொண்டு வந்த சந்தனத்தை அதன் மீது தடவி பூஜை செய்வான். அன்று கோபம் தாங்கமாட்டாமல் தேவதத்தனின் மனைவி சுமித்ரா சந்தனத்தை எடுத்து ஒளித்து வைத்து விட்டாள். எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. அதனால் அடுப்பிலிருந்த கரியின் சாம்பலை மடியில் கட்டிக்கொண்டு தேவதத்தன் கங்கை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தான். கங்கையில் நீராடிவிட்டு, விஷ்ணுவின் சகஸ்ரநாமத் தைச் சொல்லியபடி பிம்பத்தைச் செய்து வைத்தா...

🌎🌍🌏மனவளக்கலை🌎🌍🌏

படம்
  🌎🌍🌏மனவளக்கலை🌎🌍🌏 🌍🌏வாழ்க வையகம் ஜனவரி 1 வாழ்க வளமுடன்🌎🌍🌏 🌎🌍🌏மனவளக்கலை🌎🌍🌏 'உலக சமுதாயச் சூழ்நிலையில் விரிந்த கண்ணோட்டத்தோடு மக்களுக்குத் தொண்டு முறையில் ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும், அதனைத் தடுத்துக் கொண்டிருக்கும் கற்பனைப் புகையையும், துன்பங்கள், சிக்கல்கள், இவற்றைக் குறைப்பதற்காகவும் திட்டமிட்டுத் தொடங்கப் பெற்ற நிறுவனமே உலக சமுதாய சேவா சங்கமும் அதன் செயல்வழியாகிய மனவளக்கலையுமாகும். கர்மயோகம் என்னும் வாழ்க்கை நெறியை மக்கள் பண்பாடாக வளர்ப்பது சிறந்ததோர் சீர்திருத்தத் திட்டமாகும். சிந்தனையை வளர்க்க வும், அறிவிற்கு நுண்மை, கூர்மை, உறுதி, தெளிவு இவற்றையளித்து அமைதியை உருவாக்கவல்ல அகத்தவமுறை இதில் இருக்கிறது. நான் என்ன செய்கிறேன், இதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதை உணர்ந்து நல்லன தேர்ந்து செயலாற்றும் பண்பாட்டை வளர்க்க அகத்தாய்வுப் பயிற்சி இருக்கிறது. நோய்களைப் போக்கிக் கொள்ளவும், நோய் வராமல் காக்கவும் ஏற்ற உடற்பயிற்சியும், உடலோம்பும் அறிவுப் பாடங்களும் உள்ளன. விளைவறிந்து செயலாற்றும் விழிப்பு நிலையில் ஒவ்வொரு செய லிலும் இறையுணர்வைப் பெற்றும், அறவழி வாழவும் ஏற்ற கர்மயோக ...

🌏🌍🌎ஆன்மிக நெறி!🌏🌍🌎

படம்
 🌍🌎ஆன்மிக நெறி!🌏🌍🌎 அறியாமையை அகற்றுபவரை குரு என்போம். குரு என்பது ஒரு தத்துவம். போதிக்கும் அந்த தத்துவம், மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை! ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு பெரியவர், தனக்கு மொத்தம் 24 குருமார்கள் என்கிறார். நீர், நிலம், பறவை, பாம்பு உட்பட அனைத்தும் தனக்கு குரு என்கிறார் அவர். நாம், எந்தெந்த உயிர்களிடம் இருந்து வாழ்க்கைக்கு உபயோகமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோமோ... அவை அனைத்தும் ஒருவிதத்தில் நமக்கு குருதான். அவை ஒவ்வொன்றும் தரும் படிப்பினைகள்... ஒரு செய்தியாகவோ, அறிவுரையாகவோ அல்லது சம்பவமாகவோ அமையலாம். ஆனால், மந்திரங்கள் குறித்த விஷயம் வேறு! மந்திரங்களை தகுந்த நபரிடமிருந்துதான் உபதேசம் பெறமுடியும். 'மந்திரம் உபதேசிக்க என்ன தகுதி வேண்டும்?' என்று நீங்கள் கேட்கலாம்! எவரிடம் இருந்து மந்திர உபதேசம் பெற நினைக்கிறோமோ அந்த நபர், குறிப்பிட்ட அந்த மந்திரத்தை கோடிக்கணக்கில் உரு ஏற்றி, அதற்கான தேவதையை நேரில் தரிசித்தவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர் நமக்கு மந்திர உபதேசம் செய்யும்போது, அவரிடம் இருந்து தவ அக்னி நம்மீது பாயும். இப்படி, நாம் பெற்றுக்கொண்ட அக்னி...

🌎🌍🌏ஆத்ம ஜோதியை காணுதல்🌎🌍🌏

படம்
  🌎🌍🌏ஆத்ம ஜோதியை காணுதல்🌎🌍🌏 அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் இருக்கிறது. இந்த உண்மையை சித்தர்கள் கண்டிருக்கிறார்கள். பிரபஞ்சத்தில் இருளும் இருக்கிறது, ஒளியும் இருக்கிறது. அதுபோல நமக்குள் இருளும், ஒளியும் இருக்கின்றன. தியானத்தில் அனைத்து சிந்தனைகளையும் மறந்து விட்டிருந்தாலும் நான் என்ற உணர்வு நிச்சயமாக இருக்கும். அது உள்ளே ஆத்மாவில் தன்னைத்தானே காண்பது. வெளி விஷயங்களில் புலன்களும் மனமும் அடங்கிய பின் தொடக்கத்தில் எதுவும் தெரியாது. வெறும் இருள் மட்டும் தான் தெரியும். தியானம் ஆரம்பிக்கும் முன் கண்களையும், காதுகளையும் மூடிக் கொள்ள வேண்டும். தியானம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் பொழுது லேசான மங்கலான வெளிச்சம் போல தெரியும். அச்சமயம் அதில் தோன்றும் எண்ணங்களின் காட்சிகள் உங்கள் சம்பந்தப் பட்டதாக இருக்கும். அனுபவித்த பல விஷயங்கள் கண் முன் தோன்றும். நமக்குள் எவ்வளவு விஷயங்களும் எண்ணங்களும் அனுபவ நினைவுகளும் நாம் எப்படி தேக்கி வைத்திருக்கிறோம் என்று அப்பொழுது தான் தெரியும். அவற்றையெல்லாம் அள்ளிமூட்டை கட்டி வெளியில் தூக்கி உடனே போட முடியாது. ஏன் எனில் அவற்றில் ஆசை, கோபம், மயக்கம், பொற...

🌏🌍🌎மன நிம்மதியோடு வாழ தினமும் சொல்ல வேண்டிய சிவபெருமான் மந்திரம்..🌏🌍🌎

படம்
  🌏🌍🌎மன நிம்மதியோடு வாழ தினமும் சொல்ல வேண்டிய சிவபெருமான் மந்திரம்..🌏🌍🌎 🌍🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎 🌹சர்வம் சிவார்ப்பணம்... 🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்... 🌹 ஓம்.. 🌹இன்று! சுபகிருது வருடம், மார்கழி 17, ஞாயிற்றுக்கிழமை, 1.1.2023, ... வளர்பிறை தசமி திதி இரவு 11:19 மணி வரை, அதன்பின் ஏகாதசி திதி, அசுவினி நட்சத்திரம் மாலை 5:12 மணி வரை, ... நல்ல நேரம் : காலை 7:31 - 9:00 மணி ராகு காலம் : மாலை 4:30 - 6:00 மணி எமகண்டம் : மதியம் 12:00 - 1:30 ம... பரிகாரம் : வெல்லம் சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம் பொது : 2023 வருடப்பிறப்பு... உண்மையில் ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருப்பது நிம்மதியே. அத்தகைய நிம்மதியை பெற விரும்புவோர் தினமும் சிவனை வணங்கி, கீழே உள்ள ஸ்லோகம் அதை கூறலாம். விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர சிவசிவ ஹரஹர மஹாதேவா வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர சிவசிவ ஹரஹர மஹாதேவா கங்காதர ஹர சாம்ப சதாசிவாய சிவசிவ ஹரஹர மஹாதேவா த்ரியம்பகாய லிங்கேஸ்வராய சிவசிவ ஹரஹர மஹாதேவா மௌலீஸ்வராய யோகேஸ்வராய சிவசிவ ஹரஹர மஹாதேவா குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய சிவசிவ ஹரஹர மஹாதேவா நடேஸ்வரா...