இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🌎🌏🌍இஷ்ட தெய்வ தியானம்🌎🌏🌍

படம்
  🌎🌏🌍இஷ்ட தெய்வ தியானம்🌎🌏🌍 🌎🌏🌍இஷ்ட தெய்வ தியானம்🌎🌏🌍 ஓம் மந்திரமும் தியான யோகமும் தேவி பாகவதம், இராமாயனம். சிவ புராணம், பாகவத புராணம் ஆகிய நூல்களை படித்து சிந்தனை செய்து, தெய்வங் களை பற்றி நன்கு அறிந்து கொண்டு முன்பே மனதில் அந்த உருவங்களை பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தெய்வங்களின் பீஜ மந்திரங்களையும் அறிந்து கொள்ளலாம். புகைப்படம் எடுப்பதில் திறமையுள்ளவர்களும், ஓவியம் வரைபவர்களும் மிக சுலபமாக மனத்திரையில் அவர் நினைக்கும் காட்சிகளை காண முடியும். முதலில் உருவமுள்ள தெய்வத்தை தியானம் செய்து பழகிய பின் உருவமற்ற பரம்பொருள் தியான நிலைக்குச் செல்ல வேண்டும். உருவம் அல்லது அருவம் இரண்டிலும் எதை நினைத்தாலும் அது பரம்பொருளான ஒரே இறைவனிடம் கொண்டு சேர்க்கும். பரம்பொருள் பரமாத்மா சிந்தனைக்கு அப்பாற்பட்டவர் முடிவில்லா குணங்களுடன் அளவற்ற கருணையும் எல்லையற்ற மகிமையும் பொருந்தி சர்வ வியாபியாக சகல உயிர்களிலும் ஆத்மாவாக உறைந்து நிற்பவர், ஆதலால் அவர் சர்வ சொரூபமானவர். சுயம் ஜோதி பெற்று சர்வ சாட்சியாக எல்லாவற்றுக்கும் ஈசனாக மேலோனாக விளங்குகிறார். அனைத்தையும் அறிந்த சர்வக்ஞர், உயிர்களிடத்தி...

🌍🌏🌎குபேர முத்திரை🌍🌏🌎

படம்
  🌍🌏🌎குபேர முத்திரை🌍🌏🌎 🌍🌏🌎குபேர முத்திரை🌍🌏🌎 குபேரன், செல்வத்தின் அதிபதி. ஆனால், புத்த மதத்திலோ குபேரன் என்ற சொல் 'சர்வ அனுபூதி' எனப்படுகிறது. இந்த குபேர முத்திரை, நம் ஆழ்மனதைத் திறக்கும் சாவியைப்போல செயல்படுகிறது. உடல்நலம், மனநலம், வளமான வாழ்க்கை, உயர்ந்த லட்சியங்கள், தன்னம்பிக்கை ஆகியவற்றை அடையத் துணைபுரிகிறது. 🍉எப்படிச் செய்வது?🍉 கட்டைவிரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். மோதிர விரல் மற்றும் சுண்டுவிரலை மடக்கி உள்ளங்கை நடுப்பகுதியில் தொடவேண்டும். உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரை பிடிக்க வேண்டும். 🌹கட்டளைகள்🌹 தரையில் விரிப்பின் மீது சம்மணம் இட்டு அமர்ந்தோ, நாற்காலியில் உட்கார்ந்து கால்களை தரையில் ஊன்றியோ செய்யலாம். ஒரு நாளைக்கு இருவேளை 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். படுத்துக்கொண்டு செய்யக்கூடாது. 🩸பலன்கள்🩸 நீர் கோத்தலால் ஏற்படும் தலைவலி, கண்களுக்கு கீழுள்ள எலும்புகளைத் தொட்டாலோ அழுத்தினாலோ ஏற்படும் வலி, தலைப்பாரம், சைனஸ் ஆகியவை குணமாக ஒரு நாளைக்கு இருமுறை என 20 நிமிடங்கள் வீதம...

🌍🌍அறிவை வளர்க்கும் அசுவகந்தா🌎🌏🌍

படம்
  🌍🌍அறிவை வளர்க்கும் அசுவகந்தா🌎🌏🌍 🌎🌍🌍அறிவை வளர்க்கும் அசுவகந்தா🌎🌏🌍 3000உடல் ஆண்டுகளுக்கும் மேலாக நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வந்துள்ள மிகச் சிறந்த, சொந்த மருந்துப் பொருட்களுள் ஒன்று தான் இந்த அசுவகந்தா. ஆயுர்வேத மருத்துவ முறையில் உயர்ந்த மருந்துப் பொருளாக இன்றும் இது போற்றப்படுகிறது. ஆனால் வெகுஜன மக்களுக்கு முழுவதுமாகத் தெரியவில்லை. இதன் மகிமை ஒரு சிலர் மட்டுமே இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அசுவகந்தா என்றாலே அது ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடிய 'லேகியம்' என்கிற தவறான புரிதலுடன் தான் பலர் இருக்கின்றனர். நாம் அசுவகந்தாவைப் பயன்படுத்துவது தெரிந்தால் மற்றவர்கள் நம்மை ஆண்மை இல்லாதவன் என நினைத்துக் கொள்வார்களோ என்கிற அச்சமும் சிலருக்கு இருக்கிறது. இப்படி ஒருதலைப்பட்சமாக அடையாளப் படுத்தி விட்டதன் காரணமாக அதன் உண்மையான திறன்கள் மறக்கடிக்கப்பட்டு விட்டன. இதன் தாவரவியல் பெயர்: Withania somnifera குடும்பம்: Solanaceae Indian ginseng ஆங்கிலப் பெயர்: அசுவகந்தாவின் இலைகள், வேர், கனி, விதை என எல்லாமே மருந்தாகப் பயன்படுகின்றன. நம் உடலை முழு ஆரோக்கியத்துடன...

🌍🌏🌎பறிகொடுத்த சொத்துக்களை மீட்கதிருவோண விரதம் அன்று கூற வேண்டிய மகாமந்திரம்..🌍🌏🌎

படம்
  🌍🌏🌎பறிகொடுத்த சொத்துக்களை மீட்கதிருவோண விரதம் அன்று கூற வேண்டிய மகாமந்திரம்..🌍🌏🌎 🌍🌏🌎பறிகொடுத்த சொத்துக்களை மீட்கதிருவோண விரதம் அன்று கூற வேண்டிய மகாமந்திரம்..🌍🌏🌎 திருமால் ஸ்லோகம் (பறி கொடுத்த சொத்துக்களை மீண்டும் பெற ) ஆர்த்தா விஷ்ண்ணா சிதிலாச்ச பீதா  கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா:  ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்  விமுக்த து:கா ஸுகினோ பவந்து -கூரேசர் அருளிய நாராயணாஷ்டகம். 🩸பொதுப் பொருள்: 🩸 மனக்கவலை கொண்டவர்கள், துக்கத்தால் வருந்துபவர்கள், சொத்துக்களை இழந்தவர்கள். பயம் கொண்டவர்கள், தீராத நோயினால் வேதனையுறுபவர்கள் என அனைவரும் நாராயண எனும் திருநாமத்தை உச்சரித்தபோதே அந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு சுகமடைவார்கள். அப்படியொரு அமைதியை எங்களுக்கு அருள்வாய் நாராயணா. இந்த துதியை தினமுமே கூறலாம். திருவோணம் நாட்களில் இந்த துதியை மனதார ஜபித்தால் பறி கொடுத்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும். பலன் தரும் ஸ்லோகங்கள் ஓம்.. 🌏🌎🌍#இனிய #புத்தாண்டு  #நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍 🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹 🌎#சிறப்புகள் #குடும...

🌎🌏🌍ஆடி பௌர்ணமி சிறப்புகள்!!!🌎🌏🌍

படம்
  🌎🌏🌍ஆடி பௌர்ணமி சிறப்புகள்!!!🌎🌏🌍 🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎 🌹சர்வம் சிவார்ப்பணம்... 🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்... 🌹 ஓம்.. 🩸இன்று! சோபகிருது வருடம், ஆடி 16, செவ்வாய்க்கிழமை 1.8.2023, பவுர்ணமி திதி நள்ளிரவு 1:05 மணி வரை அதன்பின் பிரதமை திதி, உத்திராடம் நட்சத்திரம் மாலை 5:04 மணி வரை அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி எமகண்டம்: காலை 9:00 - 10:30 மணி குளிகை : மதியம் 12:00 - 1:30 மணி சூலம்: வடக்கு பரிகாரம்: பால் சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்  பொது : திருவோணவிரதம், பவுர்ணமி, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமி தினம் திருமால் விரத வழிபாடாகக் கொண்டாடப் படுகிறது. இதனை குரு பூர்ணிமா என்றும், வியாஸபூர்ணிமா என்றும் அழைக்கின்றனர். இந்நாளில் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பது வழக்கம். வேதம் மிகவும் நன்றாக ஒரு காலத்தில் இருந்தால் அதனையடுத்து, கொஞ்சம் மங்கியிருக்கும் காலமும் வரும். அதுபோன்ற தருணங்களில்  இறைவனால் படைக்கப்...

🌍🌏🌎திருமுறைத் தலங்களின் தெய்வீக மரங்கள் வில்வம்🌍🌏🌎

படம்
  🌍🌏🌎திருமுறைத் தலங்களின்தெய்வீக மரங்கள் வில்வம்🌍🌏🌎 🌍🌏🌎திருமுறைத் தலங்களின்  தெய்வீக மரங்கள் வில்வம்🌍🌏🌎 வில்வம் தெய்வீக மரங்களில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பது வில்வ மரமாகும். ஏனெனில் இது சிவனுக்கு மிகவும் உகந்த தாகும். யாவர்க்குமாம் இறை வற்கொரு பச்சிலை' என்பது திருமூலர் வாக்கு. அவ்வாறு திருமுலர் போற்றுவது வில்வமே என்பதில் ஐயமில்லை. புலிக்குப் பயந்து ஒரு மரத்தின் மேலே ஏறிய ஒரு குரங்கு அங்கிருந்து அந்த வில்வமரத்தின் இலை களைப் பறித்து கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது போட, தன்னையறியாமல் செய்த பூசையின் பலனாக மறுபிறவியில் முசுகுந்தச் சக்ரவர்த்தியானது என்பது புராண வரலாறு. சிவஸ்துதி என்னும் மந்திரத்தில் 'ஏக வில்வம் சிவார்ப் பணம்' என்று வருகிறது. அதனால்தான் சிவ பூசைக்கு முதற் பொருளாக இன்றளவும் வில்வம் விளங்குகின்றது. சிவபூசையில் சிறப்பைப் பெற்ற வில்வம் சங்க இலக்கியங்களில் கூவிளம் எனப் பெயர் பெற்றது. உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் குறிஞ்.65 என்று குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடப்படுகிறது. இங்கு கூவிளம் என்பதற்கு நச்சினார்க்கினியர் வில்வப்பூ என உரை கண்டுள்ளார். ...

🌎🌏🌍உடல் ஓர் அதிசயம்🌎🌏🌍

படம்
  🌎🌏🌍உடல் ஓர் அதிசயம்🌎🌏🌍 🌎🌏🌍உடல் ஓர் அதிசயம்🌎🌏🌍 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' . திருமூலர் படலை பேணிக்காப்பதற்கும், அதை ஒதுக்கிப் புறக்கணிப்பதற் கும் இடையில் நடந்த இடைவிடாத போராட்டமே நம்முடைய ஆன்மிகப் பார்வையாக இருந்தது. உடல் என்பதே பாவத்தின சின்னமென்றும், உடலை அழியக் கூடியது என்றும் நம்முடைய துறவிகள் குறிப்பிட்டு வந்தார்கள். உடல் நிலையானது என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. உடல் ஒன்றே முக்கியம் என்கிற நினைப்பு அதைக்குறித்து அதிகம் கவலைப்பட வைத்து விடும். 'உடலும், உலகமும் நிலையில்லாதவை நாம் நிரந்தரமானவர்கள் இல்லை' என்பவை எல்லாம் உலகியல் ரீதியான வாழ்க்கைக்கும் தேவையான கருத்துக்கள். உடலைப் புறக்கணிப்பது என்பது மெய்ஞானத்தை ஏற் படுத்தி விடுமா என்கிற கேள்வி எப்போதும் உண்டு. மது அருந் தாதவர்கள் அனைவரும் மெய்ஞானம் அடைந்து விட்டார்களா? புகைக்காதவர்கள் கடவுளைக் கண்டுவிட்டார்களா? என்கிற கேள் விகள் குதர்க்கமாக கேட்கப்படுவதுண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் இவற்றைச் செய்வதால் கடவுளைக் கண்டுவிட்டீர்களா? என்கிற வினாவே விடையாக இருக்க முடியும். உடல் விசித்திரமான...