இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🌏🌎🌍கோவில்கள் தோன்றியது எப்படி?🌏🌎🌍

படம்
  🌏🌎🌍கோவில்கள் தோன்றியது எப்படி?🌏🌎🌍 உலகில் மனித இனம் தோன்றிய போதே இறை ஞானமும் ஏற்பட்டு விட்டது. மனிதன் பரிணாம வளர்ச்சிப் பெற்று, ஆறு அறிவையும் பயன்படுத்தியபோது, கோவில்களுக்கான அவசியம் தானாகவே உருவாகியது. இறைவனை சரண் அடைய, சரியான இடம் கோவில்தான் என்பதை உணர்ந்தான். ஆனால் இந்த உணர்தல் என்பது நம் மூதாதையர்களிடம் உடனே ஏற்பட்ட ஒன்றல்ல. பழந் தமிழகத்தில் இயற்கையோடு இயைந்த வழிபாட்டு முறையே இறை வழிபாட்டின் தொடக்க நிலையாக இருந்தது. முதலில் சூரியன் உதிப்பதை கண்டு பயந்து அதை பார்த்து கையெடுத்து கும்பிட்டனர். பிறகு எதைப் பார்த்தாலும் புனிதமாக வணங்கத்தக்கவையாக கருதினார்கள். மலை, ஆறு, கடல், குளம், மரம், செடி, கொடி, சூரியன், சந்திரன், காற்று, தீ, வெயில், மழை, கால் நடைகள்... என எல்லாமே இறைவனது அம்சம் என்று நம்பினார்கள். இந்த இயற்கை வழிபாட்டின் பரிணாம வளர்ச்சியே, பிற்காலத்தில் பஞ்ச பூதத் தலங்களாக ஆங்காங்கே மாறின என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நீர் நிலை ஓரங்களிலும், மலைகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில் அதிக சக்தி கிடைப்பதாக குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் ஆய்வு செய்து கண்டு பிடித்துள்ளன...

🌍🌎🌏சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதேசிஅன்று கூற வேண்டிய லட்சுமி ஹயக்ரீவர் ஸ்லோகம்.🌍🌎🌏

படம்
  🌍🌎🌏சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதேசிஅன்று கூற வேண்டிய லட்சுமி ஹயக்ரீவர் ஸ்லோகம்.🌍🌎🌏 🌎இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என் இனிய நல்வாழ்த்துக்கள்...🌎🌍 🌹சர்வம் சிவார்ப்பணம்... 🌹சர்வம் கிருஷ்ணார்ப்பணம்... 🌹ஓம்.. 🌹 🌎🌏சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதேசிஅன்று கூற வேண்டிய லட்சுமி ஹயக்ரீவர் ஸ்லோகம்.🌍🌎🌏 லக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்லோகம் (ஞாபகசக்தி அதிகரிக்க, கல்வி வளம் சிறக்க) லக்ஷ்மீர் கரோம்போருஹ ஹேமகும்ப  பியுஷபூரைரபிஷிக்த ஸீர்ஷம்  வ்யாக்யாக்ஷ மாலாம்புஜ புஸ்தகானி  ஹஸ்தர்வஹந்தம் ஹயதுண்டமீடே ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்லோகம் பொதுப் பொருள்: திருமகளான மகாலட்சுமி தேவியின் தாமரை போன்ற மென்கரங்களால்,  தங்கக் குடத்தைக் கொண்டு அமுதப் பிரவாகத்தால் அபிஷேகம் செய்விக்கப்பட்டவரே,  குதிரை முகம் கொண்டவரே,  ஹயக்ரீவரே, உமக்கு நமஸ்காரம்.  சின்முத்திரை, அக்ஷமாலை, தாமரை, புத்தகம் ஆகியவற்றைக் கையில் ஏந்தி திரு மகளை அணைத்தவாறு தரிசனமளிக்கும் ஹயக்ரீவ மூர்த்தியே,  தங்களுக்கு நமஸ்காரம். (பொதுத்தேர்வுகள் வரப் போகும் சமயத்தில் மாணவ, மாண வியர் தினமும் இந்த துதியைக் கூற, பரிமுகக் கடவுளின் அருளால்...

அன்ன தானம்-தானத்தில் சிறந்த தானம் *

படம்
🌏🌍🌎 அன்ன தானம்-தானத்தில் சிறந்த தானம் *🌍🌎🌏 அன்ன தானம் நம்மிடம் இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈந்து - கொடுப்பவரும், பெறுபவரும் மகிழ்ச்சி அடைவதால் ஏற்படும் - பெரும் புண்ணியம் பெறுவதற்கான புனிதச் செயல். தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம் என்று பொதுவாக மூன்று வகைப்படுத்தப்படுகின்ற தானங்களிலும், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் சுமார் 42 வகை தானங்களிலும், மிக மிக உயர்ந்ததாகவும், உன்னதமானதாகவும், அனைவரும் செய்தே ஆகவேண்டிய தானமாகவும் கருதப்படுவது அன்னதானம் மட்டுமே ஆகும். உணவின்றி உயிரில்லை. உலகில்லை. உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது. வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும். மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும். ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே பூரணமான தானம் - அன்னதானம் மட்டுமே ஆகும். எந்த ஒரு பெரும் வைபவத்தி...

இந்த பொருட்களை தானம் கொடுக்காதீங்க...

படம்
 🌎🌍🌏இந்த பொருட்களை தானம் கொடுக்காதீங்க... 🌎🌍🌏 பலன் தரும் பரிகாரங்கள்... இந்தப் பொருளை தானம் கொடுப்பதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை  உங்களுடைய கர்மாவும், பாவமும் இரட்டிப்பாக உயரத்தான் செய்யும். இந்த காலத்தில் தானம் கொடுப்பது என்பது மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டது. யார் வேண்டுமென்றாலும், யாருக்கு வேண்டுமென்றாலும் எந்த பொருளை வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் தானம் செய்கிறார்கள். தானத்திற்கு எந்த ஒரு வரையறையும் இல்லாமல் போய்விட்டது. அந்த காலத்திலெல்லாம் தானம் என்றால் சுபகாரியங்கள் செய்யும் போது கொடுக்கக்கூடிய தானங்கள். அசுபகாரியங்கள் செய்யும் போது கொடுக்கக்கூடிய தானங்கள் என்று வரையறையோடு தானம் செய்யப்பட்டது. தானத்தினை முறையாக எப்படி செய்யவேண்டும். எப்படி செய்யக்கூடாது. தவறான தானத்தின் மூலம் நமக்கு பாவம் வந்து சேருமா? எப்படிப்பட்ட தானங்கள் தவறான தானங்களாக சொல்லப்பட்டுள்ளது என்பதை பற்றிய பார்க்கலாம்.  முதலில் முறை தவறிய தவறான தானம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். எடுத்துக்காட்டிற்கு ஒரு பசு மாட்டை வாங்கி தானமாக கொடுக்கின்றோம். அந்த பசு மாட்டை நாம் யார...

🌏🌍🌎சண்டையிடாமல் வெற்றி பெறுவதே சிறந்தது🌏🌍🌎

படம்
  🌏🌍🌎சண்டையிடாமல் வெற்றி பெறுவதே சிறந்தது🌏🌍🌎 போர்க்கலையைப் பற்றி முழுக்க ஆராய்ந்து புத்தகம் எழுதி யவர் சன்-சூ. சீன தளபதியாக இருந்தவர் அவர். எனவே அவர் எழுதிய நூல்கடன் வாங்கிய அறிவு அல்ல, கண்களால் கண்டதும், கைகளால் செய்ததும் ஏடுகளில் எழுதப்பட்டன. அவருடைய அனுபவத்தை திருக்குறள் போலச் சுருக்கிபோர்க்கலையைப் பற்றி பதிவு செய்தார். இன்றுவரை போர்க்கலையைப் பற்றி எழு திய எந்தப் புத்தகமும் அவரை மேற்கோள் காட்டாமல் எழுத முடியவில்லை. மேற்கத்திய அறிஞர்கள் அவரை மிகப் பெரிய மேதை என்றுகுறிப்பிடுகிறார்கள். மாவோ கூட அவரிடமிருந்து கிரகித்துக் கொண்டதுதான் கொரில்லா போர்முறை.  'சூ' என்றால் 'மாஸ்டர்' என்று பொருள். கிளாஸ்விட்ஸ் என்கிற ரஷிய போர் வீரர் அதை அடிப்படையா கக்கொண்டே போரைப்பற்றிய புத்தகத்தை எழுதினார்.  ஜோசப் ஸ்டாலின், மெக்கார்த்தர் போன்றவர்களும் தங்களை‘சன்-சூ வின் விசிறி' என்று அழைத்துக் கொண்டார்கள். அவர் எழுதிய நூல் 'போர்க்கலை' 13 சிறு அத்தியாயங்களைக் கொண்டது. அதில் திட்டம் தீட்டுவதிலிருந்து, ஒற்றர்களை நியமிப் பது வரை சுருக்கமாகவும், தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருக...

🌎🌍🌏பால மோஹினி தேவதாதோஷமும் - நிவர்த்தியும்..🌎🌍🌏

படம்
  🌎🌍🌏பால மோஹினி தேவதாதோஷமும் - நிவர்த்தியும்..🌎🌍🌏 சிசு ஜெனித்த பதினாறாம் நாள், பதினாறாம் மாதம், பதினாறாம் வருஷம் தெய்வகன்னி என்னும் பெயர் தரித்த பால மோஹினி தேவதை வந்தணுகும், அதன் குணம் தலை நோயுண்டாகும், முகமெல்லாம் வெளுத்து போகும், கை, கால்கள் ஓய்ந்து போகும். பரிகாரம் சுக்கிர வாரத்தில் உளுந்து மாவில் பெண்பாவை செய்து காதோலை, கருமணி, மஞ்சள் நூல், பட்டு வஸ்திரம், சுகந்த மல்லிகை மலர், தவனம் சாத்தி, பா பயர்,கரும்பு, நெய், பொங்கல், வடை, தோசை, சுண்டல் பரமான்னம், பழம், தேங்காய் வைத்து தூப தீபங் கொடுத்து பழம், மஞ்சள், சர்க்கரை, புனுகு, வங்காள பச்சை, துவரை பருப்பு,பச்சரிசி, பரிமள புஷ்பம், தாம்பூலம் தக்ஷனை வைத்து தேங்காயுடைத்து மூலமந்திரம் 108 - உரு ஜெபித்து தூபதீபங் கொடுத்து 21-எலுமிச்சம் பழமறுத்து கீழ்கண்ட மந்திரத்தை 7-தடவை ஜெபித்து, மூன்று தடனை இருவரையும் சுற்றி ஆற்றங்கரையில் வைக்கவும். மந்திரம் "ஓம் பாலகிரக பால மோஹினி ஐயுங் கிலியுஞ் சவ்வும் பாலகிரக தேவ கன்னி சர்வ பாலகிரக தோஷ நிவர்த்தி.' ஓம்.. குளிசம் கஞ்சாங் கோரைக்கு காப்புகட்டி குளிச மந்திரம் ஜெபித்து வேர் பிடிங்கி வந்து மேலே ...