🌍🌎🌏வேடன் சிவராத்திரி பலன் பெற்ற கதை🌍🌎🌏
🌍🌎🌏வேடன் சிவராத்திரி பலன் பெற்ற கதை🌍🌎🌏
சிறப்பு...🌹
சர்வம் சிவார்ப்பணம் இந்தக் கதையில் வரும் வேடன் எப்படி இந்த சிவன் ராத்திரியை பற்றி தெரியாமலேயே பல சிறப்புகள் செய்து பல பலன்களை பெற்றது போல் நம் முகநூல் நண்பர்கள் இந்த கதையைப் படித்து நீங்கள் படித்ததில்லாமல் பிறருக்கும் பகிர்ந்து சிறப்புகள் அடையவும் மகான்களின் பிரசங்கம் கேட்பது கோடி நன்மை அதுபோல் இந்த சிவன் ராத்திரியின் மகிமையை பற்றி அறிந்து கொள்வது கோடான கோடி நன்மை அதையால் இன்று கோயிலுக்கு செல்ல முடியாத நண்பர்கள் இந்த ஆன்மீக கதையை படித்து சிவபெருமானை அருள் கிடைக்குமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் சர்வம் சிவார்ப்பணம் இந்த சர்வம் சிவார்ப்பணம் அர்த்தம்தான் எதுவும் எனக்கு இல்லை இறைவா எல்லாம் உமக்கே!
நைமிசாரணியவாசிகள் சூதமுனிவரை நோக்கி, "சிவஞானச் செல்வரே! தாங்கள் கூறிய சிவராத்திரி மகிமையைக் கேட்டுப் பரமானந்தம் அடைந்தோம். மேலும் இந்த விரதத்தின் பயனை விரிவாகச் சொல்லியருள வேண்டும். அஞ்ஞானத்தோடு இந்த விரதத்தை கடைப் பிடித்தால் ஏதாவது பயனுண்டாகுமா?" என்று கேட்டார்கள். சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார்.
முனிவர்களே! சிவராத்திரி மகிமையில் ஒரு வேடனின் பாபங்களையெல்லாம் ஒழித்துள்ளதான பூர்வீகமான கதை ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைச் சொல்கிறேன் கேளுங்கள்.
"ஒரு வனத்தில் மகாப்பலசாலியும் பெருங் குடும்பஸ்தனுமான வேடன் ஒருவன் இருந்தான். அவன் மிருகங்களை வேட்டையாடுவதோடு வழிப்பறி செய்தும் பிழைத்து வந்தான். அவன் இளம்பருவ முதல் ஒருபோதும் நற்கருமம் எதையுஞ் செய்யாதவனாக இருந்தான். அவன் பெயர் குருத்ருஹன். அவன் இவ்வாறிருக்க,
ஓம்..
வேடன் சிவராத்திரி பலன் பெற்ற கதை
ஒரு சமயம், சுபகரமான சிவராத்திரி சம்பவித்தது. அது அந்தத் துராத்மாவுக்குத் தெரியாது. அந்த மஹாசிவராத்திரி தினத்தன்று அந்த வேடனின் தந்தை தாய் மனைவி முதலியோர் அவனை நோக்கி, எந்த வகையிலாவது ஜீவஹிம்சை செய்து தங்களுக்கு உணவு வகைகளைக் கொண்டு வந்து கொடுக்கும்படிக் கேட்டார்கள். உடனே வேடன் தன் வில்லை எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்று, மிருகங்களைத் தேடியலைந்தான்.
மிருகமும் அவன் பார்வையில் படவில்லை. பறவைகளுங்கூடக் கிடைக்கவில்லை. தெய்வயோகம் அவனுக்கு ஒரு அப்படி இருந்தது. மாலைப்பொழுதும் நெருங்கியது. சூரியனும் அஸ்தமித்தது. வேடன், தன் வீட்டில் தன் குழந்தைகளும் தாய் தந்தையரும் மனைவியும் ஆகாரமின்றி வருந்துவார்களே என்று எண்ணி வருந்தினான். எனவே எந்த வகையிலாவது சிறிதேனும் கொண்டுதான் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று ஆகாரந்தேடிக் தீர்மானித்துக் கொண்டு அருகிருந்த தடாகத்தில் சிறிது தண்ணீர் பருகி, ஒரு பாத்திரத்தில் சிறிது ஜலங்கொண்டு, தடாகக் கரையில் தழைத்திருந்த வில்வமரம் ஒன்றில் ஏறி மறைந்து கொண்டான்.
“தாகத்தை தணித்துக் கொள்ள தடாகத்திற்கு ஏதேனும் மிருகங்கள் வரக்கூடும். அப்படி வந்தால் அவற்றைக் கொன்று விடலாம்" என்று எண்ணினான். மிருகங்கள் எப்போது வரும்? நான் பசியுடன் எப்போது அவற்றை எய்வேன்? என்று வேடன் நினைத்து வருந்தி இன்று நமக்கு இரையில்லையே! உபவாசமிருக்க நேர்ந்ததே என்று சிந்தை நொந்து வருந்திக் கண்விழித்துக் கொண்டிருந்தான். முதல் ஜாமத்தில் பெருந் தாகத்தோடும் பயத்தோடும் பெண் மான் ஒன்று அங்கே வந்தது. அதைக் கண்டதும் வேடன் மனம் மகிழ்ந்து அம்பை வில்லில் பூட்டினான். அவனது உடலசைவால் அவன் கையிலி ருந்த பாத்திரத்திலிருந்து சிறிது ஜலமும் வில்வ மரத்திலிருந்து சிறு வில்வதளங்களும் அந்த மரத்தடியிலிருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுந்தன. இதனாலேயே அந்த வேடன் அந்தச் சிவராத்திரியில் முதற்கால பூசையைச் செய்தவனானான். அத்தகைய பூசையின் பயனாக அவனது மாபாதகங்கள் நசித்தன.
இந்நிலையில் வேடன் அம்பை வில்லிற் பூட்டிய சத்தத்தைக் கேட்ட பெண்மான், “ஐயோ! எங்கே போவேன்? என்ன செய்வேன்?
ஓம்..
இந்த வேடன் என்னை எப்படியும் பாணத்தால் கொன்று விடுவானே, நோக்கி, “வேடா! நீ என்ன செய்ய நினைத்திருக்கிறாய்?'' என்று கேட்டது. அாற்கு அந்த வேடன், “மானே! நான் ஒரு பெரிய குடும்பஸ்த என் குடும்பம் முழுவதும் ஆகாரமில்லாமல் பெரிதும் கஷ்டப் படுகிறது. ஆகையால் உன்னைக் கொன்று அவர்களுக்கும் எனக்கும் ஆகாரமாக்கப் போகிறேன்" என்று கூறினான்.
அதற்கு பெண்மான், பாபாத்மாவாகிய அந்த வேடனை நோக்கி 'அப்படியானால் நான் தன்யையானேன். பயனற்ற இந்த உடலின் 66 இறைச்சியால் உனக்கும் உன் குடும்பத்திற்கும் சுகம் உண்டாகுமேயானால் பரோபகாரத்தால் உனக்கு உண்டாகும் புண்ணியத்தை நானும் அடைவேன். இந்தப் புண்ணியப் பலனை பல வருஷங்கள் சொன்னாலும் சொல்லி முடியாது. பயனற்ற என் தேகத்திற்கும் சாபல்லியங் கிடைக்கும். ஆனால் எனக்குச் சில குட்டிகள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்கும்படி என்னுடன் பிறந்த ஒரு பெண்மானை நியமித்துவிட்டு, என் கணவனுக்கு அந்த மானையே மனைவியாக இருக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு மீண்டும் இங்கே வருகிறேன். என் இறைச்சியாலேயே நீங்கள் திருப்தி யடைவதாயின் எனக்கு மிகவும் சுபமே!' என்று கூறியதும் அதைக் கேட்ட வேடன் சிறிதும் நம்பாமல், "ஆபத்துக் காலத்தில் யாவரும் சமயோசிதமாகப் பொய் பேசுதல் வழக்கம்" என்றான்.
ஆனால் பெண்மானோ, 'வனசரா! சத்தியத்தாலேயே சூரியன் முதலிய தேவர்கள் யாவரும் பிரகாசிக்கின்றார்கள் என்றும் சத்தியத்தாலேயே சமுத்திரம் அணையின்றி இருக்கிறதென்றும் சத்தியத்தாலேயே இந்திரன் மழை பெய்விக்கிறான் என்றும் சத்தியத்தாலேயே யாவும் நிலைத்திருக்கின்றன என்றும் அறிவாயாக! ஜீவஹிம்சை செய்கின்ற நீ என் சொல்லை பொய்யெனக் கொள்ள வேண்டாம்” என்றது. வேடன் அதை நம்பாமலிருக்க பெண்மான் மேலும் சொல்லியது.
“வேடனே! நான் சொல்வதைக் கேள்! நான் சொல்லியபடி மீண்டும் உன்னிடம் வந்து உனக்கு இரையாகத் தவறுவேனாகில் நான் பெரும் பாபத்தை அடைவேன். எப்படி என்றால் வேதவிக்கிரயம் செய்த பிராமணன் பெறும் பாபத்திலும்,
திரிகாலசந்தியாவந்தனங்களைச் செய்யாதவன் போகும் பாபத்திலும், கணவன் கட்டளையை நிராகரித்த மனைவி அழுந்தும் பாபத்திலும், செய்நன்றி பாபத்திலும், சிவத்துரோகியும் விஷ்ணுத் துரோகியுமடையும் பாபத்திலும் குருத்துரோகி பெறும் பாபத்திலும், வேத விருத்தமான ஆசாரத்தில் நடப்பவன் அடையும் பாவத்திலும், போவேன்" என்று பலவாறாகவும் கூறியது. வேடன் அதன் வார்த்தைகளைக் கேட்டு நம்பிக்கையுடையவனாய், "மானே! நீ இனி உன்னிடத்திற்கு விரைவிற் சென்று திரும்பி வருக!" என்று விடைகொடுத்தான். பெண்மான் பெருங்களிப்படைந்து தாகந்தணித்துக் கொண்டு தன்னிடத்தை அடைந்தது. அதுவரையில் முதல் ஜாம முற்றும் வேடனுக்கு நித்திரையின்றிச் சென்றது.
அவ்வாறிருக்கையில் முன் வந்து போன பெண்மான் தன் மூத்தாள் தாக விடாயுடன் நீர் பருகச் சென்று நெடுநேரமட்டும் வராமையின், இளையமான் அதைத் தேடிக் கொண்டும் இரைச்சலிட்டுக் கொண்டும் அந்தக் குளக்கரையை அடைந்தது. வேடன் அதைக் கண்டு குணத்தொனி செய்தான். அப்பொழுதும் முன் போலவே சிறிது
ஜலமும் சில வில்வபத்திரங்களும் அம்மரத்தடியிலிருந்த சிவ என்ன லிங்கத்தின் மீது விழுந்தன. அதனால் சர்வேசுவரனாகிய சிவபெருமானுக்குச் சிவராத்திரி காலத்தில் வேடன் இரண்டாம் ஜாம் பூஜை செய்தவனானான். அவ்வேடுவனை அவனது பாணகர்ஷணஞ் செய்யும் ஒலியால் உணர்ந்த இளைய மான் "ஒ வேடா! செய்யக் கருதினை?" என்று வினவியது.
வேடன் முன் அதன் தமக்கைக்குக் கூறியவாறே கூறினான். மகா தன்யை! ஒ வனசர சிரேஷ்டா! அநித்தியமான இத்தேகம் பிறருக்கு உபகாரமாகுமேயானால் உன் தேகம் பலனடையும். ஆயினும் வீட்டில் இளம் பிராயமுடைய சில குட்டிகளிருக்கின்றன. அவற்றை என் கணவனுக்கு ஒப்புவித்து விட்டு நான் மீண்டும் சத்தியமாக வருவேன்!" என்று கூறியது.
அதற்கு வேடன் “நான் உன் வார்த்தையை நம்ப மாட்டேன். தடையின்றி உன்னைக் கொல்லுவேன்” என்றான். ஆனால் பெண்மானோ, “வியாதனே! நான் திரும்பவும் உன்னிடம் வராவிட்டால் அசத்திய வார்த்தைகளைக் கூறினோர் தாம் அதுகாறும் செய்த புண்ணியங்களை இழந்து எவ்வகைய பாபத்திற் போவாரோ அவ்வகைய பாபத்திலும், அடிக்கடிப் பூமியைக் காலால் உதைப்பவர் உறும் பாவத்திலும் கற்புடைய மனைவியை விலகிப் பிரஷ்டையான ஒர் சோர ஸ்திரீயைப் புணர்ந்தவன் போகும் பாபத்திலும் வேதோக்தமான மார்க்கத்தை விடுத்துக் கல்பிதமான மார்க்கமாகவே நடப்பவர் அடையும் பாபத்திலும் விஷ்ணு பக்தி செய்து கொண்டு சிவதூஷணஞ் செய்வோரும் சிவபக்தி செய்து கொண்டு விஷ்ணு தூஷணம் செய்வோரும் பெறும் பாபத்திலும், தாய் தந்தையர்களது வருஷாப்திகத்தை விடுத்தவன் செல்லும் பாபத்திலும் முதலில் இதவார்த்தைகள் கூறி பரிதாபமுண்டாக்கிப் பின்னர் வஞ்சிப்பவர் அடையும் பாபத்திலும் போகக் கடவேன்" என்று கூறியது.
வேடுவன் அதன் வார்த்தைகளைக் கேட்டு அதனிடத்தும் நம்பிக்கை வைத்து, "ஓ மானே! நீ அப்படியே உன்னிடத்திற்குச் சென்று அதி சீக்கிரத்தில் வருக" என்று விடுவித்தான். அந்த மான் மகிழ்ச்சியற்று தண்ணீர் பருகித் தன்னிடத்தையடைந்தது. அது வரையில் அவ்வேடுவனுக்கு இரண்டாம் ஜாமமுற்றும் நித்திரையின்றி நீங்கியது.
ஓம்..
வேடன் சிவராத்திரி பலன் பெற்ற கதை
இதற்குள் அவ்விரு பெண்மான்களுக்கும் கணவனாக உள்ள ஆண்மான் அவ்விரண்டு மான்களையும் தேடிக் கொண்டு அந்த நீர்த்துறையை அடைந்தது. பருத்துயர்ந்திருக்கும் அவ்வாண்மானை வேடுவன் கண்டு பெருங்களிப்படைந்து, “ஆ! ஆ! மிக்க மாமிசம் உடையதாயிருத்தலின் நமக்குத் திருப்தியான ஆகாரமாகுமென்று கருதி வில்லை டங்காரம் செய்து அதை எய்ய யத்தனித்தான். அப்போது முன் போலவே அவன் வசமிருந்த ஜல பாத்திரத்திலிருந்து சிறிது ஜலமும் மரத்திலிருந்து சில வில்வதளங்களும் அம்மரத்தடியிலி ருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அதனால் அவன் சிவராத்திரி காலத்தில் மூன்றாம் ஜாம பூஜை செய்தவனானான். சௌனகாதி முனிவர்களே! பக்தியின்றி சம்பவித்த செயல்களுக்கும் களிகூர்ந்து பூஜை செய்ததாக கருதிய சிவபெருமானுடைய கருணையை என்னவென்று சொல்லக் கூடும்." மேலே கதையைக் கேளுங்கள்.
வேடுவனது நாணெறிந்த ஒலியைக் கேட்ட ஆண்மான் அவ்வேடுவனை நோக்கி, “நீ என்ன செய்யக் கருதினாய்?” என்று வினவியது. வேடன் முன் போலவே கூறினான். அதைக் கேட்ட ஆண்மான் சந்தோஷித்து “நான் இப்பொழுதுதான் தன்யனானேன். பூரித்திருக்கும் என் தேக மாமிசத்தினால் உன்னைப் போன்றவர்கள் திருப்தியடைவது பற்றிப் பெரும் பிரயோசனமடைவேன். ஒருவன் தன் தேகத்தை பரமார்த்தமாகப் பிறர்க்கு உபகாரஞ் செய்யாவிட்டால் அவன் பெற்றுள்ள யாவும் வீணாகி விடும். சமர்த்தனாயிருந்தும் பிறர்க்கு உதவாதவனின் சௌகரியம் பயன்பெறாது. ஆதலின் என் உடலால் உனக்கும் உன் குடும்பத்திற்கும் தடையின்றி திருப்தி உண்டாகும். ஆயினும் எனக்குச் சில குட்டிகள் இருப்பதால் அவற்றை என் பேடுகளிடம் ஒப்பித்து விட்டு அவைகட்கு நல்ல வார்த்தைகளால் புத்திகூறி நிச்சயமாக வந்து உனக்கு இரையாகிறேன்" என்று கூறியது. ஆனால் வேடுவன் அதன் வார்த்தையைக் கேட்டு, "ஓ மிருகமே! இதுகாறும் இங்கு வந்த மிருகங்கள் யாவும் உன்னைப் போலவே இந்த வார்த்தைகள் சொல்லி என்னை வஞ்சித்து விட்டுப் போயின. ஒன்றேனும் இதுகாறும் வரவில்லை. நீயும் அப்படியே ஆபத்து வேளையில் அபத்தமுரைத்துப் போய் விட்டால் எனக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வாறு ஜீவனம் நடக்கும்?" என்றான்.
ஆண்மான் அவன் வார்த்தைகளைக் கேட்டு "ஒ வனசாரா! என்னிடத்தில் பொய் என்பதே கிடையாது.சத்தியத்தினாலேயே
சராசரப் பிரமாண்ட முழுவதும் விளங்குகின்றது. பொய் பேசுகிறவன் பூர்வத்திற் செய்த புண்ணியம் முழுவதையும் க்ஷணகாலத்திலே நாசப்படுத்துகிறான். இப்பொழுது நீ நம்பாத பக்ஷத்தில் நான் ஒரு பிரதிக்கினை செய்கிறேன். அதாவது சந்தியாவந்தன காலத்தில் கேளிக்கையிலும் சிவராத்திரி காலத்தில் போஜனஞ் செய்தவன் வைத்திருக்கும் பொருளை அபகரித்தவன் அடையும் பாபத்திலும், சந்தியாவந்தனத்தை விடுத்த பிராமணன் பெறும் பாபத்திலும், கற்றும் சூனியமாயுள்ளவன் அடையும் பாபத்திலும், பிறர்க்கு உதவி செய்யாத மகா சமர்த்தனாயுள்ளவன் பெறும் பாபத்திலும், பகற்புணர்ச்சி பர்வகாலத்திலும் விரதகாலத்திலும் செய்தவன் பெறும் பாபத்திலும், புசிக்கத் தகாத பதார்த்தங்களைப் புசித்தவன் பெறும் பாபத்திலும் நான் வாராத பட்சத்திற் போகக் கடவேன்” என்று கூறியது.
அதனால் வேடன் வியாதன் அதன் வார்த்தையில் நம்பிக்கையுடையவனாகி “போய் வருக!” என்று விடுப்பித்தான். ஆண்மான் அகமகிழ்ச்சியோடு நீர் பருகித் தன் இடத்தை அடைந்தது. அப்பொழுது அம்மூன்றும் சந்தித்து நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லிக் கொண்டவைகளாய், சத்திய பாசத்தாற் கட்டப்பட்டவைகளாய் அவசியம் அவ்வேடுவனிடம் போக வேண்டுமென நிச்சயித்துக் கொண்டு, குட்டிகளை நல்ல வார்த்தைகளால் இதமாக அவ்விடத்திலேயே விட்டுவிட்டுப் புறப்பட்டன.
அப்பொழுது அவற்றுள் மூத்தப் பெண்மான் தன் கணவனை
நோக்கி, “இக்குட்டிகள் அநாதரவாக இருப்பதால் இவை எவ்வாறு
ஜீவிக்கும்? நான் முதலில் வருகிறேன்" எனப் பிரதிக்ஞை செய்து
வந்தமையால் "நான் மட்டுமே போக வேண்டும். நீங்கள் இங்கே இருக்க
வேண்டும்" என்று கூறியது. அதைக் கேட்ட இளைய பெண் “நான்
உங்களிருவருக்கும் பணிவிடை செய்ய வேண்டியவளாய் இருக்கிறேன்.
ஆதலின் நான் இவனுக்கிரையாகப் போகிறேன். நீங்கள் இங்கேயே
இருக்கலாம்'' என்றது. அப்போது ஆண்மான் அவ்விரண்டின்
வார்த்தைகளையுங் கேட்டு, "நான் ஒருவனே அவனிடம் போகிறேன்.
நீங்கள் இங்கேயே இருக்கலாம்" என்றது. ஆனால் பெண்மான்கள்,
"ஐயோ! நீ இறந்தால் நாங்கள் விதவைத் தன்மையடைந்து ஜீவிப்பதைக்
காட்டிலும் கஷ்டம் வேறுண்டோ?" என்று கூறி, தங்கள் குட்டிகளைத்தக்கபடியே சில மான்களிடம் ஒப்படைத்துவிட்டு மூன்றும் ஒன்றுகூடி அவ்வேடுவன் இருக்குமிடத்திற்கு வந்தன. வேடுவனும் அம்மான்கள் மூன்றும் எப்பொழுது வருமோவென்னும் எண்ணத்துடன் வழி பார்த்துக் கொண்டிருந்தான்.
வேடன் சிவராத்திரி பலன் பெற்ற கதை
சத்தியபாசத்தாற் கட்டப்பட்டு வருகின்ற அந்த மூன்று மான்களையுங் கண்ட வேடன் சந்தோஷப்பட்டு 'ஆ' இம் மிருகங்கள் நம்மிடத்தே சொல்லிப் போனதுபோல மீண்டும் வந்தன என்று நினைத்துத் தன் வில்லை டங்காரம் செய்தான். அவ்வாறு டங்காரஞ் செய்கையில் அவன் கையிலிருந்த ஜல பாத்திரத்திலிருந்து சிறிது ஜலமும் அம்மரத்தினின்று சில வில்வ பத்திரங்களும் அம்மரத்தடியிலி ரூந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. அதனால் அவன் சிவராத்திரி காலத்தில் நான்காம் ஜாம பூஜை செய்தவனானான். அவ்வேடுவனுடைய பாபங்கள் விட்டொழிந்தன. அப்பொழுதே அவனை
இதற்குள் அம்மிருகங்கள் மூன்றும் "ஓ வனசாரா! எங்கள் மாமிசங்களை விரைவில் உனக்கு உணவாக்கிக் கொண்டு எங்களைக் கிருதார்த்தர்களாக்க வேண்டும்" என்று கூறின.
வேடன் அவற்றின் வார்த்தைகளால் மிக்க வியப்படைந்து தான் அன்றையத் தினம் அறியாமற் செய்த சிவபூஜா பலத்தினால் திவ்விய ஞானமடைந்து “ஆஹா! அறிவுக் குறையுள்ள இம்மிருகங்கள் தங்கள் தேகத்தால் அன்னியருக்கு உதவி செய்து எவ்வளவு தன்யமாகின்றன? நான் மனுஷ ஜன்மம் எடுத்து என்ன புண்ணியம் சம்பாதித்தேன்? பிறரைத் துன்புறுத்தி என் உடலையும் என் குடும்பத்தையும் போஷித்தேன். பிறரை வருத்தியே உயிர் வாழ்ந்த எனக்கு என்ன கதி கிடைக்குமோ? நான் எவ்வெவ் கஷ்டங்களை அனுபவிப்பேனோ? இந்த உடலால் பலவிதமான பாபங்களைச் சம்பாதித்தேனல்லவா? இதுகாறுந் தீவினைகளையே செய்து இப்பொழுது துக்கிக்கிறேன். என் வாழ்க்கை நிந்திக்கத் தக்கது” என்று தனக்குள் தானே சொல்லிக் கொண்டு அவற்றை எப்படியும் தன் வில்லிலுள்ள அம்பால் இனி கொல்லப் படாதென்னுங் கருத்துடன் உடனே வில்லினின்று எடுத்து விட்டு "ஓ உத்தமமான மிருகங்களே! நீங்கள் பரோபகாரம் செய்து வந்தமையால் தன்யர்களாக இருக்கிறீர்கள். உங்களைக் கொல்லமாட்டேன். இனி உங்கள்
வாசஸ்தானத்திற்குத் திரும்பிப் போங்கள்" என்று கூறுகையில், கடூர மனமுடையவனாயிருந்து திவ்ய ஞானத்தையடைந்த அவ்வேடனாற் பூஜிக்கப்பட்ட சிவபெருமான் அவனது பூஜைக்கு மனம் மிக மகிழ்ந்து எக்காலமுந் தெளிந்த ஞானிகளால் தியானிக்கப்பட்ட ஐந்து திருமுகங்களோடும் தமது திவ்ய திருவுருவ தரிசனம் கொடுத்து தயா சமுத்திரமான சிவபெருமான் 'என்ன வரம் வேண்டுமோ அதனைக் கேட்டுக் கொள். உன் விஷயத்தில் தயையுடையவனாக இருக்கிறேன்" என்றார்.
உடனேவியாதன்'திவ்விய ஞானமுடைய ஜீவன் முக்தனாய் சர்வேசுவரனுடைய திருவடிகளில் சாஷ்டாங்கமாகப் பணிந்து எல்லாப் பாபங்களும் என்னால் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மன்னித்து எளியேனை அனுக்கிரகிக்க வேண்டும்' என்று பிரார்த்தித்தான். மகாதேவனாகிய சிவபெருமான் அவனுக்குக் குகன் என்னும் பெயரளித்து "உன் மனத்திற் கருதிய சுகபோகங்களை அடைவாய். நீயொரு இராஜதானியையும் காக்க வல்லவனாவாய். உன் வமிசம் விருத்தியாகும். தேவர்களாலேயும் துதி செய்யத்தக்க திவ்வியமான கீர்த்தியை அடைவாய். அயோத்தி மன்னனாகிய தசரதன் குமாரனாகிய விஷ்ணுவே இராம அவதாரஞ் செய்யும்போது உன்னிடத்தில் வந்து உன்னால் பூஜிக்கப்பட்டுச் செல்லுபவன். தேவர்கட்கும் முனிவர்கட்குங் கிடைத்ததற்குத் துர்லபமான முக்தியைப் பெறுவாய். உன் வமிசத்தவர்கள் என்னைப் பூஜை செய்யும் விரதத்தை வகித்து மகா பலவான்களாக விளங்குவார்கள்" என்று வரங்கொடுத்தருளினார்.
இவ்வாறிருக்கையில் மான்களின் குட்டிகளும் தங்கள் தாய் தந்தை பலருக்கு உண்டாகும் கதியே தங்களுக்கும் சம்பவிக்கட்டுமென்று நினைத்து உடனே அவ்விடம் வந்து சேர்ந்தன. அதனால் அந்த மான்களுக்குங் குட்டிகளுக்குஞ் சிவதரிசனங் கிடைத்தது. சிவதரிசனத்தால் அம்மிருகங்கள் சமுசார விருப்பத்தையும் மிருக தேகத்தையும் ஒழித்துத் திவ்வியதேகம் பெற்று அங்கு வந்திறங்கிய விமானத்தில் ஏறிச் சுவர்க்கலோகத்தை அடைந்தன. சர்வேசுவரனாகிய சிவபெருமான் அவ்விடத்தில் அற்புதாசலத்தில் வியாதனாகிய வேடுவனால் பூஜிக்கப்பட்டமையால் வியாதேசுவரர் என்னும் பெயரையடைந்து எழுந்தருளியிருக்கிறார். அக்குக வேடனும் அது முதல் அகண்ட ஐசுவரியமடைந்து
இராமமூர்த்தியைத் தரிசித்துப் பல காலங்கழித்து, ஆயுள் முடிவிற் சிவசாயுச்சியத்தையடைந்தான். ஆகையால் அறியாமையாலேயே சிவராத்திரி விரதத்தை அனுசரிப்பவர்கள், சிவசாயுச்சியத்தை அடைவதானால் ஞானவான்களால் பக்தியோடு அவ்விரதத்தை அனுசரித்தவர்கள் சிவரூபத்தை அடைவார்கள் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. எல்லாச் சாஸ்திரங்களும், தருமங்களும், விரதங்களும், தீர்த்த யாத்திரைகளும், தானங்களும், பலன்களும் சிவராத்திரி விரதத்துடன் விவரிக்கையில் சமானமாக மாட்டா. ஆகவே மிக்க சுபகரமான இச்சிவராத்திரி விரதத்தை இதத்தை விரும்புவோராகிய நீங்கள் ஆசரிக்க வேண்டும். இந்த விஷயத்தைப் பற்றி இதுகாறுஞ் சொல்லிய தோஷ பாபத்தை ஒழிக்கத்தக்க வேறொரு சரிதமும் உங்கட்கு சொல்லுகிறேன்.
ஓம்...
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக